பேரு கூட என்னமோ வாலுன்னு வருமே, அட ஆமா கெஜ்ரிவாலு ... நடிகர் செந்தில்
கரூர்: காங்கிரஸ் கட்சியை ஒழிச்சாலே நாட்டில் ஊழல் தானாக ஒழிந்துவிடும் எனத் தெரிவித்துள்ளார் நகைச்சுவை நடிகர் செந்தில்.
கரூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக நேற்று நகைச்சுவை நடிகர் செந்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :-

இங்க இருக்குற ஒரு தலைவரு காலேஜ் நடத்துறதுக்காக கட்சி நடத்துறாரு. இன்னொருத்தரு மவன தேர்தல்ல நிறுத்தாமலே அமைச்சராக்க பாக்குறாரு. அப்புறம் ஒருத்தர் இருக்காறே... பேரு கூட என்னமோ வாலுன்னு வருமே அட ஆமா கெஜ்ரிவாலு இருக்காரே காங்கிரசுகிட்ட காசு வாங்கிட்டு கட்சி நடத்துறாரு. இன்னொருத்தர பத்தி நான் என்ன சொல்ல, தலைமையே ஆடினா கட்சி என்ன கதியாகும் சொல்லுங்கண்ணே.. இப்படிபட்ட தலைவருங்கள பாத்துட்டு மக்களே அதிமுகவுக்கு ஓட்டு போட முடிவு பண்ணிடாங்கண்ணே.. கண்டிப்பா 40 தொகுதியும் நமக்கு தாண்ணே. தமிழ்நாட்டுல ஊழல் அதிகமாகிடுச்சுன்னு யாரு சொல்றா பாருங்க.. சிதம்பரம் இப்படி சொல்றதுக்கு என்ன அருகதையிருக்கு சொல்லுங்க. காங்கிரசை ஒழிச்சாலே ஊழல் தானா ஒழிஞ்சுடுண்ணே...' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications