காவிரி மேலாண்மை வாரியம் கோரி ஈரோட்டில் பேரணி: 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
காவிரி மேலாண்மை வாரியம் கோரி ஈரோட்டில் பேரணி நடைபெற்றது.
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஈரோட்டில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஈரோடை அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியானது வைராபாளையம் கவாரி ஆற்றின் கரையில் தொடங்கியது. இந்த பேரணியின்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,காவிரி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளும் எழுப்பபட்டன. நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற வாகன பேரணியானது ரயில் நிலையம் அருகே நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications