கீழ்பவானி பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் கோரி ஈரோட்டில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கீழ்பவானி பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர்க்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர்க்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானிசாகர் அணையிலிருந்து கீழ் பவானி பாசன கால்வாயிற்கு ஏப்பரல் 27ம் தேதி முதல் மே 9ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவின் பேரில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனையடுத்து 9ம் தேதியுடன் நிறைவடை உள்ளதால் கீழ் பாவனி பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடக்கோரி ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் முன்பு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்பாட்டத்தின்போது தற்போது திறந்துவிட்டு உள்ள 10 நாட்கள் தண்ணீரால் 1லட்சத்து 3000 ஏக்கர் முழுமை பெறாது என்றும் பவானிசாகர் அணையில் 6 டிஎம்சி தண்ணீர் மற்றும் மேல் அணைகளான குந்தா, பில்லூர் ஆகிய அணைகளில் 9டிஎம்சி தண்ணீரும் இருப்பு உள்ளதால் தமிழக அரசு கூடுதலாக 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications