தேர்ச்சி விகிதத்தில் 97.5% பெற்று ஈரோடு முதலிடம்... அடுத்த இடங்களில் நாமக்கல், விருதுநகர்
பிளஸ்-2 தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ - மாணவிகள் எழுதினார்கள். அந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் வெளியிடப்பட்டது.
கடந்தப் பல ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் தான் தமிழகத்திலேயே அதிக தேர்ச்சி விகிதத்தை தக்க வைத்திருந்தது. ஆனால் இம்முறை ஈரோடு மாவட்டம் 97.5 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது.
96.5% தேர்ச்சி விகிதத்துடன் இரண்டாவது இடத்தில் நாமக்கல் மாவட்டம் உள்ளது. 96.12% தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
அதேபோல், பெரம்பலூர் மாவட்டம் 96.12 சதவீதமும், ராமநாதபுரம் மாவட்டம் 93.06 சதவீதமும், கோவை மாவட்டம் 94.89 சதவீதமும், தஞ்சாவூர் மாவட்டம் 89.78 சதவீதமும், புதுக்கோட்டை மாவட்டம் 89.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் 95.72 சதவீதமும், சிவகங்கை மாவட்டம் 93.4 சதவீதமும், திருப்பூர் மாவட்டம் 94 சதவீதமும், தருமபுரி மாவட்டம் 93.24 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்த வரிசையில் மிகக் குறைந்த அளவாக 74.4 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.