ஓ.பி.எஸ் அணிக்கு மாறினார் ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம்
முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஓபிஎஸ்க்கு ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம் ஆதரவு தெரிவித்துள்ளர்ர். முதல்வரை ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு அவர் தெரிவித்தார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஓபிஸ்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலைல் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகிவருகிறது. இந்நிலையில் முதல் முறையாக மேயர் ஒருவர் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications