மருத்துவராக விரும்பும் விவசாயி மகள் ஈரோடு திப்திஸ்ரீ....!
ஈரோடு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி ஸ்ரீவித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி திப்திஸ்ரீ, 499 மார்க் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஈரோடு மாவட்ட அளவிலும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
தீப்திஸ்ரீயின் தந்தை பெயர் சண்முகசுந்தரம் ஒரு விவசாயி. தாய் பெயர் சந்திரா.
திப்திஸ்ரீயின் தம்பி வைபவ் இதே பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சத்தியமங்கலம்தான் சொந்த ஊர்:
இவர்களது சொந்த ஊர் சத்தியமங்கலம் வனப்பகுதி தாளவாடி அருகே உள்ள ராமாபுரம் ஆகும்.
விடுதியில் தங்கி படிப்பு:
இந்த வெற்றி குறித்து மாணவி திப்திஸ்ரீ, ‘‘இந்த பள்ளியில் 8 ஆம் வகுப்பில் இருந்து விடுதியில் தங்கி படித்து வருகிறேன்.
ஆசிரியர்களே முழுக்காரணம்:
எனது வெற்றிக்கு பள்ளி முதல்வர் சாந்தி, தாளாளர் டாக்டர் ஸ்ரீதர், செயலாளர் கோதை ஸ்ரீதர், பொருளாளர் கீதா ரவீந்திரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் அளித்த ஊக்கமே காரணம்.
சிறப்பு கவனம்:
மேலும் ஆசிரியைகள் பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி ஊக்கப்படுத்தி கற்று கொடுத்தனர்.
டாக்டராக விருப்பம்:
எதிர்காலத்தில் டாக்டருக்கு படித்து மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications