ஸ்டாலின் பக்கம் 'அழகிரி'யின் எஸ்ஸார் கோபி - அழகிரியால் பல பதவிகளை அனுபவித்தவர் கோபி
மதுரை: மு.க.அழகிரியால் பல பதவிகளை அனுபவித்த அவரது முக்கிய ஆதரவாளர்களில் ஒருவரான எஸ்ஸார் கோபி இன்று திடீரென மு.க.ஸ்டலாலின் பக்கம் தாவி விட்டார்.
அவருடன் 40 பேர் ஸ்டாலினை சந்தித்து அவருக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
லோக்சபா தேர்தலில் திமுகவைத் தோற்கடிக்க அல்லது கடும் பாதிப்பை ஏற்படுத்த பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளார் மு.க.அழகிரி. அவரை பல்வேறு கட்சியினரும் நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.

இந்த நிலையில் அழகிரி ஆதரவாளரான எஸ்ஸார் கோபி தன்னுடன் 40 பேரை கூட்டிக் கொண்டு இன்று சென்னை வந்தார். அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேர்தலில் தாங்கள் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபடுவதாக உறுதியளித்தார்.
எஸ்ஸார் கோபி, அழகிரியின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தவர். அவருக்கும், அவரது தம்பிகளுக்கும் அழகிரி பல பதவிகளை வாங்கிக் கொடுத்து கம்பீரமாக நடை போட வைத்திருந்தார். மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி சேர்மன் பதவி, அவனியாபுரம் நகராட்சி சேர்மன் பதவி, மற்றும் அவனியாபுரம் நகர செயலாளர் பதவி, திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் என பல பதவிகளை இவர்கள் வகித்தனர்.
இத்தனையும் அழகிரியால்தான் இவர்களுக்குக் கிடைத்தன. இந்த நிலையில் அழகிரியை உதறி விட்டு ஸ்டாலின் பக்கம் இவர்கள் போய் விட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications