கோவலன் யார்?.. கண்ணதாசன் அளித்த அதிரடி தீர்ப்பை பாருங்க!
கண்ணதாசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
Recommended Video

சென்னை: மிகப்பெரிய ஞானக்கடல் கண்ணதாசன். எனவேதான் கவியரசரின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்கள் ஒவ்வொன்றுமே சுவாரஸ்யங்கள் கொண்டது. அந்த கடலின் ஒரு துளி இது...
பல்வேறு தொடர்ச்சியான நிகழ்ச்சிகளில் கண்ணதாசன் கலந்து கொண்ட நேரம் அது. அதனால் ரொம்ப டயர்டாகவே இருந்தார். அப்படித்தான் ஒரு பட்டிமன்றத்திலும் கலந்து கொள்ள நேர்ந்தது. நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது விழா ஏற்பாட்டாளர்களிடம், "எவ்வளவு பேர் பட்டிமன்றத்தில் பேச இருக்கிறார்கள்" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "அந்தஅணியில் 3 பேர். இந்த அணியில் 2 பேர், கடைசியாக நீங்கள்" என்றார்கள்.

ஓ அப்படியா என்று கேட்டுவிட்டு, முதல் பட்டிமன்ற பேச்சாளர் பேச ஆரம்பிக்கும்போதே மேடையில் தூங்க ஆரம்பித்துவிட்டார். அவரது அணிக்காரர்களுக்கோ கலக்கம், என்னடா இது? கவிஞர், தூங்கறாரே, மற்றவர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். பேசுவதை குறிப்பெடுத்து வைத்து கொண்டால்தானே அதை வைத்து பேச முடியும். எதிரணிக்கு பதிலளிக்கவும் முடியும்?" என்று மண்டையே காய்ந்துவிட்டது.
எல்லோரும் பேசி முடித்து கவிஞர் பேச வேண்டிய நேரம் வந்தது. அருகில் சென்று எழுப்பினார்கள். அடுத்ததாக பேச போவது கவிஞர் கண்ணதாசன் என்று அறிவித்தும் விட்டார்கள். கண்விழித்த கவிஞர், ஒருகணம் திரும்பி விழாமேடையின் பின்னால் வைக்கப்பட்டிருந்த பட்டிமன்ற தலைப்பு என்னவென்று அப்போதுதான் பார்த்தார்.
"கோவலன் செட்டியாரா? வேறு இனத்தவனா?" என்பது பட்டிமன்ற தலைப்பின் பெயர். அதற்கு முன்பு எந்த அணியினர் என்ன பேசிவிட்டு போனார்கள் என்றுகூட தெரியாது. இப்போது, கவிஞர் பேசினார்... "கோவலன் என்னைக்கு கட்டின பொண்டாட்டியை விட்டுவிட்டு வேறு ஒருத்தியை தேடி போய்ட்டானோ, அப்பவே அவன் "செட்டியார்"னு ஆயிடுச்சு இல்லை? இதுக்கு எதுக்கா ஒரு பட்டிமன்றம்?ன்னு முடிவையே சொல்லிட்டு போய் உட்கார்ந்து விட்டாராம்!
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications