கொலை மிரட்டல் வழக்கு... சென்னை கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: கொலை மிரட்டல் வழக்கில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். ஏற்கனவே அவர் முன் ஜாமீன் பெற்றுள்ளதால், அவரை நீதிபதிகள் செல்லலாம் என அனுமதித்தனர்.
சமீபத்தில் சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசினார். இது தொடர்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக இளங்கோவன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இது ஒரு புறம் இருக்க, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தொலைபேசி உதவியாளராக இருந்தவர் வளர்மதி (50). இவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 18-ம் தேதி ஒரு புகார் கொடுத்தார்.
அதில், ‘‘காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான காமராஜர் அரங்கத்தில் நான் பணியாற்றியபோது அரங்கம் மற்றும் கடைகளின் வாடகை கணக்கு விவரங்களை கவனித்து வந்தேன். காமராஜர் அரங்கத்தின் மேலாளர் நாராயணன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் சேர்ந்து வாடகை பணத்தை கட்சிக் கணக்கில் சேர்க்காமல் மோசடி செய்வதை கண்டுபிடித்தேன். இதுகுறித்து கேட்டதற்கு, இளங்கோவன் என்னை தரக்குறைவாக பேசினார். அடிக்கவும் முயற்சித்தார். தொடர்ந்து என்னை மிரட்டினார். வேலையில் இருந்தும் நீக்கிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த புகார் மீது விசாரணை நடத்துமாறு தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு அறிவுறுத்தப் பட்டது. இதையடுத்து, உதவி ஆணையர் சிவபாஸ்கர், காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். தாக்க முயற்சித்தல், தரக்குறைவாக பேசுதல், கொலை மிரட்டல், உட்பட 7 பிரிவுகளில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி இளங்கோவனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவர் மதுரையில் தங்கியிருந்து கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான இளங்கோவன், ஜாமீனுக்கான பத்திரத்தைத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, முன் ஜாமீன் பெற்றுள்ளதால் இளங்கோவன் செல்லலாம் என நீதிபதி உத்தரவிட்டார். இளங்கோவனுக்கு முன் ஜாமீன் பிணைத் தொகையாக இரண்டு பேர் தலா ரூ. 10 ஆயிரம் நீதிமன்றத்தில் செலுத்தினர்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நாளை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி, இளங்கோவன் கையெழுத்துடுகிறார்.
-
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?












Click it and Unblock the Notifications