அதிமுக அரசின் 25 ஊழல்கள்.. லிஸ்ட் வெளியிட்ட ஈவிகேஎஸ்.. தனியாக வந்தால் ஆதாரம் தருவாராம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிரான ஊழல் பட்டியலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ளார். அதில் ஆவின் பால் கலப்பட ஊழல், பள்ளிக் கல்வித்துறையில் ஊழல், கோகோ கோலா நிறுவனத்திற்கு நிலம் வழங்கியதில் ஊழல், கிரானைட் ஊழல் உள்ளிட்ட 25 ஊழல்களை பட்டியலிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அ.தி.மு.க. அரசு மீதான ஊழல் பட்டியலை வெளியிட்டார்.

அந்த பட்டியலில்,

செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமாரசாமி தற்கொலை
மின் கொள்முதலில் ஊழல்
கோகோ கோலா நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியதில் ஊழல்
உயர்கல்வித்துறையில் ஊழல்
ஆவின் பால் கலப்பட ஊழல்
லேப்டாப் ஊழல்
நெடுஞ்சாலைத்துறை ஊழல்
பாதாளச் சாக்கடை ஊழல்
ஊழலால் ரத்து செய்யப்பட்ட உடன்குடி மின் திட்டம்
டாஸ்மாக் ஊழல்
நெல் மூட்டைகளில் கலப்பட ஊழல்
தொழிற்துறையில் ஊழல்
மின்சார வாரிய ஊழல்
செய்தித்துறையில் ஊழல்
போக்குவரத்துத்துறை ஊழல்
நூலகத்துறையில் ஊழல்
மருத்துவத்துறையில் ஊழல்
பத்திரப்பதிவுத்துறை ஊழல்
ரியல் எஸ்டேட் ஊழல்
வணிக வரித்துறை ஊழல்
கிரானைட் ஊழல்
மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலில் ஊழல்
இஎஸ்ஐ மருத்துவமனை ஊழல்
பொது விநியோகத்துறையில் ஊழல் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

EVKS Elangovan releases corruption list against state government

நடவடிக்கை இல்லையே

ஊழல் பட்டியலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசு மீதான 25 ஊழல் குற்றச்சாட்டு பட்டியலை ஏற்கனவே தமிழக ஆளுநரிடம் அளித்துள்ளதாவும், ஆனால் அதுகுறித்து இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடகங்கள் முன் வெளியீடு

ஆளுநரிடம் கடந்த மே மாதம் மனு அளித்தோம். 25 ஊழல் பட்டியலில் முத்துக்குமாரசாமி தற்கொலை மீதும், கோகோ கோலா நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்ததன் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறுகின்றனர். மற்ற ஊழல்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ஊடகங்கள் முன்பு இந்த ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ளோம் என்றார்.

மக்கள் முன்பும் வெளியிடுவோம்

வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது எனவே விரைவில் மக்கள் முன்பாகவும் இந்த ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என்று கூறினார். காங்கிரஸ் கட்சியில் ஊழல் புகார்கள் எழுந்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

ஆதாரம் வேண்டுமா?

இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், நான் அளித்த ஊழல் பட்டியல் புத்தகத்தை படித்து பாருங்கள், அதில் ஆதாரம் இருக்கிறது. ஆதாரம் போதவில்லை என்றால் தனியாக வாருங்கள் நாளை தருகிறேன் என்றும் கூறினார்.

அடிச்சாலும் கோபப்படமாட்டேன்

செய்தியாளர்கள் பலரும் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் பல கேள்விகளை எழுப்பினர். அனைத்திற்குமே ஊழல் பட்டியலை படிங்க என்றார். ஜெயாடிவி ரிப்போர்ட்ர்ஸ் வந்திருப்பீங்க.. என்னை கோபப்படுத்தினாலும் நான் கோபப்படமாட்டேன். அடிச்சாலும் நான் அமைதியாத்தான் இருப்பேன் என்று கடைசியில் போட்டரே ஒரு போடு... அட காரசாரமாக ஏதாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம் கடைசியில இப்படி சப்புன்னு போச்சே...

முழு விவரங்களுக்கு....

தமிழக அரசு மீது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகளின் முழு விவரத்தை படிக்க:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+