விஜயகாந்த் தலைமையில் இணைவதில் தவறா? கேட்பது மாஜி முல்லைவேந்தன்
சென்னை: விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க.வில் இணைவதில் தவறு ஏதும் இல்லை என்று தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கூறியுள்ளார்.
தி.மு.க.வில் உட்கட்சி பூசலா நீண்டகாலத்துக்கு முன்னரே ஒதுக்கி வைக்கப்பட்டு நீக்கப்பட்டவர் முல்லைவேந்தன். அவ்வப்போது அவர் அதிமுகவுக்கு போகிறார்... பாரதிய ஜனதாவுக்கு தாவுகிறார் என செய்திகள் வந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் தற்போது தே.மு.தி.க.வுக்கு தாவ அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனை நியாயப்படுத்தும் விதமாக, விஜயகாந்த் சிறந்த குடிமகன் விருதை அப்துல் கலாம் கையால் பெற்றவர்.. அவரை நான் கருணாநிதி பாராட்டு விழா மேடையில் பேச வைத்தேன்.. சட்டசபை லாபியில் கூட சந்தித்து பேசியிருக்கிறேன்.. அவரது பேச்சையெல்லாம் பத்திரிகைகளில் அறிக்கையாக கொடுக்க சொன்னேன்.. அதனால் அவர் தலைமையில் இணைவதில் தவறு இல்லை என்று கூறியிருக்கிறார் முல்லைவேந்தன்..
சீக்கிரம் ஏதாவது முகாமில் ஐக்கியமாகட்டும்!












Click it and Unblock the Notifications