ஜெ. இறந்தது இரவு... ஆனால் மாலையே பதவியேற்பு பணிகள் நடந்தது ஏன்?.. ஆறுமுகசாமி ஆணையம் பரபரப்பு கேள்வி
சென்னை: ஜெயலலிதா இறப்பதற்கு முன்பே புதிய முதல்வர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றதாக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் கடந்த நவம்பர் மாதம் முதல் தனது விசாரணையை தொடங்கினார்.
2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரை இருமுறை சந்தித்ததாகவும் அவர் நலமுடன் இருப்பதாக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் தெரிவித்திருந்தார். ஆனால் ஜெயலலிதாவை ஆளுநர் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சர்ச்சை
இதனால் ஜெயலலிதாவை ஆளுநர் பார்த்தாரா இல்லையா என ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இதுகுறித்து வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி ஆஜரான அவர் அளித்த சில பதில்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாகம் மறுப்பு
அவர் கூறுகையில் 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மாலையே வித்யாசாகர் ராவின் உத்தரவின் பேரில் புதிய முதல்வருக்கான பதவியேற்பு ஏற்பாடுகளை முடித்துவிட்டோம் என்று கூறியுள்ளார். 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்த செய்தியை அப்பல்லோ நிர்வாகம் மறுத்துவிட்டது.

முரண்பட்ட தகவல்
அவர் அன்றைய தினம் இரவு 11.30 மணிக்குத்தான் இறந்தார் என நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் ஜெயலலிதா உயிரிழந்த நேரம் குறித்து ரமேஷ் சந்த் மீனா கூறியிருக்கும் தகவலில் முரண்பாடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஜராகி விளக்கம்
ஜெயலலிதா இரவுதான் இறந்தார் என செய்தி வெளியான நிலையில் முன்கூட்டியே பதவியேற்புக்கான ஏற்பாடுகளை செய்தது எப்படி என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே அப்பல்லோ மருத்துவர்கள் ராஜ் பிரசன்னா, விக்னேஷ் ஆகியோரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications