சசிகலா, தினகரனோட கூட்டு சேர்ந்து எடப்பாடியார் நாடகமாடுகிறார்... கே.பி.முனுசாமி பளார்!
சசிகலா கட்டுப்பாட்டில் தான் கட்சியும் பழனிசாமி ஆட்சியும் நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை : சசிகலா மற்றும் தினகரன் கட்டுப்பாட்டில் இயங்கும் அதிமுக அம்மா அணியுடன் இனி பேச்சுவார்த்தை நடப்பது என்பது சாத்தியமே இல்லை என்று ஓ.பிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் நிர்வாகிகள் கூட்டம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டில் அவரது தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் சில நாட்களுக்கு முன், அமைச்சர்கள் தனியாகவும், முதல்வருடன் ஆலோசனை நடத்தியும் தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர்.

தினகரன் கட்சியை விட்டு விலக்கி வைக்கப்பட்டு விட்டார் எனவே பேச்சுவார்த்தை வாருங்கள் என்று எங்கள் அணிக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக சசிகலாவையும், தினகரனையும் நீக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவேயில்லை.
சிறையில் இருந்து வந்த தினகரனை அதிமுக அம்மா அணியின் எம்.எல்.ஏ.க்கள் போட்டி போட்டு சந்தித்து செல்கின்றனர். அதில் சிலர் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சிக்கின்றனர். தினகரனை சந்தித்த எம்.எல்.ஏ.,க்கள் மீது முதல்வர் பழனிசாமி என்ன நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் மூலமே சசிகலா கட்டுப்பாட்டில் தான், கட்சியும் பழனிசாமி ஆட்சியும் இயங்குகிறது என்பது உறுதியாகி உள்ளது. இத்தகைய ஒரு சூழலில் பேச்சுவார்த்தை வார்த்தை நடத்துவதற்கு சாத்தியமே இல்லை, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications