2 அணிகளும் இணையும் வாய்ப்பே இல்லை.. முன்னாள் எம்பி ரித்தீஷ் திட்டவட்டம்
சென்னை: பிளவுபட்டுள்ள அதிமுக அணிகள் இணையும் சாத்தியம் இல்லை என்று முன்னாள் எம்பி ரித்தீஷ் கூறினார்.
சென்னை பெசண்ட் நகரில் உள்ள டிடிவி தினகரனை முன்னாள் எம்பி ரித்தீஷ் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

எப்போதும் போல் நாங்கள் தினகரனை பார்க்க வந்தோம். பேசினோம். அவ்வளவுதான். மற்றபடி எது குறித்தும் நாங்கள் பேசவில்லை. அதிமுக அலுவலகத்திற்கு தினகரன் செல்வது குறித்து இதுவரை இன்னும் முடிவெடுக்கவில்லை.
60 நாள் கெடு முடிந்துவிட்ட நிலையில், இனிதான் என்ன செய்வது என்று தினகரன் முடிவு செய்வார். பின்னர் அறிவிப்பார். கட்சி காப்பாற்றப்பட வேண்டும். ஆட்சி நல்ல முறையில் நடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கட்சி சற்று தொய்வில் இருக்கிறது. அது சிறப்பாக நடக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம்.
கட்சி பலமாகத்தான் இருக்கிறது. ஆனால் தலைமை இல்லாமல்தான் தொண்டர்கள் தவித்து வருகின்றனர். அதனால் தினகரன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பொதுச் செயலாளர் சசிகலா சிறையில் இருப்பதால் தினகரன்தான் தலைமையாக இருந்து செயல்பட வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர்.
தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் இணைவதற்கான சாத்தியம் தெரியவில்லை. இணைந்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் அனைவரின் விருப்பம் என்று ரித்தீஷ் கூறினார்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications