விரைவில் ஒன்றுபட்ட அதிமுக.. எடப்பாடியார் பரபர பேச்சு!
விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது,விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவை பார்க்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
பிளவுபட்டுள்ள அதிமுக ஒன்றாக இணைந்தால் மட்டுமே இரட்டை இலை சின்னத்தையும், மீட்க முடியும் என்பது இரு அணி தலைவர்களுக்குத் தெரியும். தொண்டர்களும் அணிகள் இணையவேண்டும் என்றுதான் விரும்புகின்றனர்.

ஆனால், எங்கள் நிபந்தனைகள் நிறைவேற்றப்படாத வரைக்கும் அதிமுகவின் பிரிந்த அணிகள் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்று அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் நிர்வாகிகள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுகவைச் சேர்ந்த 250 பேர் என் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
நீர் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்றுள்ளார்.
போதிய மழை இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குடிநீருக்கு தேவையான நிதி ஒதுக்கி, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இரட்டை இலை சின்னத்தை மீட்கும் வகையில் அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications