மேலூர் அருகே 'டாக்டராக" சிகிச்சை கொடுத்த நர்சு கைது
மேலூர்: மேலூர் அருகே நர்சிங் படித்ததை வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொங்கம்பட்டியை சேர்ந்தவர் விசாலாட்சி. இவர் தும்பைப்பட்டியை அடுத்த அம்பலக்காரன்பட்டியில் ஒரு வீட்டில் கிளினிக் நடத்தி வந்துள்ளார்.
இங்கு படுக்கை வசதி அமைத்து பலருக்கும் சிகிச்சை அளித்ததோடு, மருந்து மாத்திரைகளும் வழங்கி உள்ளார்.
இந்த நிலையில் இவரது செயல்பாடு சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது விசாலாட்சி போலி டாக்டர் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து மேலூர் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது விசாலாட்சி தாம் நர்சிங் படித்துள்ளதாகவும் அதை வைத்து சிகிச்சை அளித்து வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications