கடன் பிரச்சினை... சென்னை ரியல் எஸ்டேட் அதிபரைக் கொலை செய்த நண்பர்... குடும்பத்துடன் கைது
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பர் குடும்பத்தினரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கொடுத்தக் கடனைத் திருப்பிக் கேட்டதால் இந்தக் கொலை நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருவள்ளூரை அடுத்த அரண்வாயலில் ஒரு பிளாஸ்டிக் பீப்பாயில் ஆண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செவ்வாய்பேட்டை போலீசார், உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தப்பட்டு வந்தது.
இதற்கிடையே பத்திரிகையில் வெளியான செய்தியைப் பார்த்து சென்னை ஜாபர்கான்பேட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சின்னப்பொன்னு என்பவர் இறந்தது தன்னுடைய மகன் லட்சுமணன் (38) என போலீசாரிடம் அடையாளம் காட்டினார்.
கொலை செய்யப்பட்ட லட்சுமணன் சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து லட்சுமணனின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், லட்சுமணனின் நண்பரான ஜாபர்கான்பேட்டை தெய்வநம்பி தெருவை சேர்ந்த வெங்கடேசன் (36) என்பவர் மீது போலீசாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர் தான் கொலையாளி என்பது தெரியவந்தது.
போலீசாரிடம் வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததால் லட்சுமணனிடம் அதிக பணம் புழக்கத்தில் இருந்து வந்தது. நான் பண கஷ்டத்தில் இருந்ததால் சில மாதங்களுக்கு முன்பு அவரிடம் கடனாக ரூ. 90 ஆயிரம் வாங்கினேன். குறித்த நேரத்தில் என்னால் கடனை திருப்பி கொடுக்க முடியாததால் லட்சுமணன் பணத்தை வட்டியுடன் திருப்பி தருமாறு வற்புறுத்தினார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
லட்சுமணனை கொலை செய்துவிட்டால் தொல்லை இருக்காது என நினைத்து கடந்த 7-ந் தேதி அவரை என் வீட்டிற்கு வருமாறு அழைத்தேன். அப்போது எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் கத்தியால் அவரை குத்தி கொலை செய்தேன். பின்னர் எனது தந்தை ராஜகோபால் (66), தாயார் உஷா (54) ஆகியோர் உதவியுடன் வீட்டிற்குள் இருந்த பிளாஸ்டிக் பீப்பாயில் லட்சுமணனின் உடலை போட்டு போலீசார் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக அவர் உடல் மீது மிளகாய் பொடியை தூவினேன்.
கடந்த 9-ந் தேதி விடியற்காலை ஒரு மினி வேனை பேசி காய்கறி சப்ளை செய்ய வேண்டும் என வாடகைக்கு அழைத்து நானும், என் தந்தையும் காய்கறி மூட்டைகளுடன் பிளாஸ்டிக் பீப்பாயை வைத்து கொண்டு வந்தோம். அரண்வாயல் பகுதி வந்தவுடன் சாலையோரம் மினி வேனை நிறுத்தி காய்கறி சப்ளை செய்து வருவதாக டிரைவரிடம் கூறிவிட்டு பிளாஸ்டிக் பீப்பாயை வீசிவிட்டு வந்தோம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வெங்கடேசன், அவருடைய தந்தை ராஜகோபால், தாயார் உஷா ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மினி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
துரிதமாக செயல்பட்டு சம்பவம் நடந்த சில தினங்களிலேயே குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படை போலீசார் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் பாராட்டியுள்ளார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications