நீதி கேட்ட மகனின் காதலியை வெட்டிக் கொன்ற தந்தை: காதலன் குடும்பத்தோடு தலைமறைவு
ஈரோடு: திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கோடாரியால் வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவான காதலனையும், அவனது குடும்பத்தாரையும் ஈரோடு போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த ஓராண்டாக கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த சத்தியப்பிரியாவும், சொட்டையான்பாளையத்தைச் சேர்ந்த ரகுநாத் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், திடீரென மனம் மாறிய ரகுநாத், சத்தியப்பிரியாவை திருமணம் செய்துகொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி கடந்த ஞாயிறன்று மதியம் ரகுநாத் வீட்டிற்குச் சென்றுள்ளார் சத்தியப்பிரியா.
அப்போது, ரகுநாத்தின் பெற்றோருக்கும், சத்தியப்பிரியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரகுநாத்தின் தந்தை சத்தியப்பிரியாவைக் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில், சம்பவ இடத்திலேயே சத்தியப்பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சத்தியப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள ரகுநாத், ஈஸ்வரன், ஈஸ்வரனின் மனைவி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications