பயிர் கருகிய அதிர்ச்சியில் விவசாயி தற்கொலை.. என்று முடியும் இக் கொடுமை.. உறவினர்கள் கதறல்
பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எப்போதுதான் இந்தக் கொடுமைகள் முடிவிற்கு வருமோ என்று உறவினர்கள் கதறி அழுதனர்.
சென்னை: போதிய அளவு தண்ணீர் இல்லாமல், 10 ஏக்கர் பயிர் கருகிய வேதனையில் விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோபிச்செட்டிப் பாளையம் அருகே உள்ளது வேலம்பாளையம். அங்கு வசித்து வந்தார் விவசாயி பழனிசாமி. 45 வயதான இவர் 10 ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்திருந்தார். போதிய அளவு நீர் இல்லாமல் பயிர்கள் மொத்தமும் காய்ந்து கருகிவிட்டன.

இதுதவிர, பழனிச்சாமி, விவசாயம் மற்றும் வீட்டுத் தேவைக்காக கடனும் வாங்கியுள்ளார். விவசாயம் பொய்த்துப் போனதால் எப்படி கடனை திருப்பித் தருவது என்ற மனவேதனையிலும் அவர் இருந்துள்ளார்.
கடன் கொடுத்தவர்களுக்கும் கடனை கொடுக்க முடியவில்லை. வங்கிக்கடனையும் திரும்பி செலுத்த முடியாத சூழலில் பழனிச்சாமி தற்கொலை முடிவெடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்றபட்டது. விவசாயிகளின் தற்கொலையை தடுக்க உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று பழனிசாமியின் உறவினர்களும் விவசாயிகளும் கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications