கடன் வாங்கி விதைத்த நெல் முளைக்காததால் மனமுடைந்த விவசாயி தற்கொலை ?
திருத்துறைப்பூண்டியில் நேரடி நெல் விதைப்பு முளைக்காததால் வேதனையில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே கடன் வாங்கி விதைத்த நெல் முளைக்காததால் மனமுடைந்த விவசாயி கோவிந்தராஜ் என்பவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
திருவாரூர் மாட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த ரகுராதபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ். இவர் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் நேரடி சம்பா சாகுபடி விவசாயத்தை மேற்கொண்டுள்ளார். போதிய மழை மற்றும் விவசாயத்திற்கு தேவையான அளவில் தண்ணீர் இந்தாண்டு வராமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பயிர்கள் கருகி சுமார் 4 ஏக்கர் நிலமும் முற்றிலும் பாதிப்பிற்குள்ளானது. இதனால் கடந்த சில நாட்களாக என்ன செய்வதென்று தெரியாமல் வேதனையில் தவித்துள்ளார் கோவிந்தராஜ். வங்கியில் வாங்கிய கடனை எப்படி திருப்பி அடைப்பது என்ற சோகமும் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் விரக்தி அடைந்த கோவிந்தராஜ் கடந்த 1ம் தேதி வயல் அருகே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
பயிர்கள் வாடியதால் வங்கியில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் கோவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் சோகத்துடன் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இது சந்தேக மரணம் என காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. அவரின் இறப்பு தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் விளக்கமளித்துள்ளனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications