முதல்வருக்கு கருப்புக் கொடி காட்ட முயற்சி.. காவிரி உரிமை மீட்புக் குழு தலைவர் மணியரசன் கைது!
மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் பழனிசாமிக்கு கருப்புக்கொடி காட்டிய பெ. மணியரசன் உள்ளிட்டோர் கைதானார்கள்.
திருவாரூர் : காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி அளித்ததை கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரியில் மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதி அளித்தள்ளதாக குற்றம்சாட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக முதல்வர் பழனிசாமிக்கு விவசாய சங்கத்தினர் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக வந்துள்ள அமைச்சர்கள் தங்கியுள்ள விடுதி அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவிற்கு அணை கட்ட எப்படி அனுமதி அளித்தது அரசு. இது விவசாயிகளின் வாழ்வை சீரழிக்கும் விஷயம் என்று காவிரி உரிமை மீட்புக் குழுவின் தலைவர் பெ. மணியரசன் தெரிவித்தார்.
போராட்டத்தின் நடுவே சாலையில் அமர்ந்து போராட முயன்ற மணியரசனை போலுசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதே பன்று கருப்புக்கொடி காட்ட முயன்ற மேலும் சில விவசாயிகளும் கைது செய்யப்பட்டனர்.