மேட்டூர் அணையில் நீரை திறக்க வலியுறுத்தி கல்லணையில் இறங்கி போராடிய விவசாயிகள் கைது
கல்லணையில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video

திருச்சி: குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கல்லணையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டூர் அணை கட்டப்பட்டு 85-வது ஆண்டு ஆகிறது. பொதுவாக ஜூன் 12-ந்தேதியன்று மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் ஜூன் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளை அதிர்ச்சிக்கும், கவலைக்கும் உள்ளாக்கியது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க கோரியும் கல்லணையில் இறங்கி விவசாயிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் போராட்டத்தில் புரட்சிகர விவசாய சங்கத்தினரும் இணைந்து கரம் கோர்த்து கோரிக்கை குறித்து குரல் கொடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளையும், புரட்சிகர விவசாய சங்கத்தினரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications