For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரியலூர்: மகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட கூர்க்கா கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

அரியலூர்: அரியலூரில் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இரவு காவலாளி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அரியலூர் விளாங்காரத் தெருவில் வசித்து வருபவர் மங்கள்பகதூர்(44), இரவுக் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேபாளத்தைச் சேர்ந்த இவரது மனைவி கவுடாதேவிசிங், மகள் சிந்துசிங்(13) இவர் அரியலூரில் உள்ள ஒரு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

Father arrested for allegedly molesting teenage daughter

இந்நிலையில், மங்கள்பகதூர், மது குடித்து விட்டு வந்து மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மகளை நிர்வாணப்படுத்தி அடிக்கடி தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கவுடாதேவிசிங் அளித்தப் புகாரின்பேரில் அரியலூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து மங்கள்பகதூரை கைது செய்தார்.

English summary
A 44-year-old man has been arrested for allegedly molesting his teenage daughter at his house on the outskirts in Ariyalur on Friday, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X