ஈரோட்டில் பெற்ற மகள்களிடமே “சில்மிஷம்” செய்த தந்தை கைது
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோட்டில் பெற்ற மகள்களிடமே பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகிலுள்ள பச்சமலை ரோடு, முத்துக்குமார் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கோபியிலுள்ள ஒரு தனியார் கேஸ் கம்பெனியில் சிலிண்டர் சப்ளையராக உள்ளார்.

இவரது மனைவி சியாம் சுந்தரி. இத் தம்பதியருக்கு 16, 12 வயது என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மகள்களிடம் சிவக்குமார் அடிக்கடி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக கோபி அனைத்து மகளிர் போலீசில் சியாம் சுந்தரி நேற்று புகார் செய்தார்.
இதன்படி வழக்குப் பதிவு செய்த போலீசார் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் 2012 ஆம் ஆண்டின் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிவக்குமாரை நேற்றிரவு கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications