ஃபெரா வழக்கு : தினகரனுக்கு எதிரான வழக்கை 3 மாதத்தில் முடிக்கணும் - நீதிபதி கறார்
டிடிவி தினகரனுக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். தம்மிடம் உள்ள கேள்விகளை கேட்ட தினகரனுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள 'பார்க்லே' வங்கியில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் ரூ.44 லட்சம் இங்கிலாந்து பவுண்டுகளை 'டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட்' என்ற நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோதமாக முதலீடு செய்தார் என்பது தினகரன் மீதான புகார்.
இது தொடர்பாக கடந்த 1996ஆம் ஆண்டு டி.டி.வி.தினகரன் மீது மத்திய அமலாக்கப்பிரிவினர் அந்நிய செலாவணி மோசடி வழக்கைப்பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications