கூடங்குளத்தில் புதிய அணு உலைகள் அமைக்க களப்பணி.. வளாக இயக்குனர் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
கூடங்குளத்தில் 5 மற்றும் 6வது அணு உலைகளுக்கு தேவையான நில அளவு செய்யும் பணி தொடங்கியுள்ளது
நெல்லை: கூடங்குளத்தில் தற்போது உள்ள அணு உலைகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், புதிதாக 2 அணு உலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நேற்று 69வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. வாளக இயக்குனர் தில்பக்சிங் சவுத்ரி இதில் கலந்துக்கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் டோஸ்கோ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடங்குளம் முதலாவது மற்றும் இரண்டாவது அணு உலைகள் முழு அளவிலான 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன. இதுவரையிலும் இந்த அணு உலைகளில் 22,800 கோடி மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது என்றும் கூறினார்
மேலும் பேசிய அவர், 3 மற்றும் 4வது அணு உலைக்கான கட்டுமான பணிகள் தொடர்ந்து திட்டமிட்டப்படி நடந்து வருகிறது. 5 மற்றும் 6வது அணு உலைக்கான களப்பணியும் தொடங்கப்பட்டுள்ளது. நிலத்தை தேர்ந்தெடுத்து அளக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
போதிய பாதுகாப்பு இல்லாததால் கூடங்குளத்தில் உள்ள மக்கள் தற்போது இருக்கும் அணு உலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புதிதாக அணு உலைகளை அமைக்கும் பணியில் மத்திய அரசு இறங்கியுள்ளது அப்பகுதி மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications