திருப்பதியில் மட்டுமல்ல ஸ்ரீரங்கம் கோவிலிலும் நீடிக்கும் வடகலை, தென்கலை பஞ்சாயத்து!

திருப்பதியில் மட்டுமல்ல கடந்த ஆண்டு ஸ்ரீரங்கம் கோவிலிலும் கூட வடகலை, தென்கலை வைணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பதி ஏழுமலையானுக்கு போட்ட நாமத்தின் வடிவத்தை அர்ச்சகர் ஒருவர் மாற்றியதால் சர்ச்சை வெடித்திருக்கிறது. இந்த பஞ்சாயத்து ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலிலும் தொடருகிறது.

வைணவத்தைப் பின்பற்றுவோரில் வடகலை, தென்கலை என இரு பிரிவினர் உண்டு. இருபிரிவினரும் தங்களது சம்பிரதாயங்களே உயர்ந்தது என போர்க்கொடி தூக்குவர்.

ஸ்ரீரங்கத்தில்..

ஸ்ரீரங்கத்தில்..

இதேதான் தற்போது திருப்பதியில் வெடித்திருக்கிறது. கடந்த ஆண்டும் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலின் கும்பாபிஷேகத்தின் போது யாகசாலை பூஜையில் வடகலை அர்ச்சகர்கள் பங்கேற்க முயன்றனர்.

கோர்ட் உத்தரவு

கோர்ட் உத்தரவு

ஆனால் இதற்கு தென்கலை அர்ச்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி யாகசாலை பூஜைகளில் வடகலை அர்ச்சகர்கள் உட்கார கூடாது என்பது தென்கலையினர் வாதமாக இருந்தது.

கோர்ட்டுக்கு போவோம்

கோர்ட்டுக்கு போவோம்

அப்போது தென்கலையினர், 1941-ம் ஆண்டு துறையூர் முனிசீப் நீதிமன்றம் தந்த தீர்ப்பில் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் தென்கலை அர்ச்சகர்களே வேத பாராயணங்களை ஓத முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்ததாம். இதை வடகலையினர் மீறினால் நீதிமன்றப் படிகள் ஏறுவோம் என்றனர்.

மீண்டும் பஞ்சாயத்து?

மீண்டும் பஞ்சாயத்து?

இருந்தபோதும் இந்த விவகாரத்தில் இந்துசமய அறநிலையத்துறை தலையிட மறுத்துவிட்டது. தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வெடித்திருக்கும் பஞ்சாயத்து மீண்டும் ஸ்ரீரங்கத்தில் புயலை கிளப்பவும் வாய்ப்பிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+