ராம்குமார் மரணத்தில் யாரையோ காப்பாற்றுகிறது அரசு... வழக்கறிஞர் சங்கர சுப்பு குற்றச்சாட்டு!
சென்னை: ராம்குமார் மரணத்தில் யாரையோ அரசு காப்பாற்ற முயற்சி செய்கிறது. உண்மையை வெளி கொண்டு வர போராடிக் கொண்டிருக்கிறோம் என்று ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் சங்கர சுப்பு கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கு 3வது நீதிபதி கிருபாகரன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. 2 மணி நேரம் விசாரணை முடிவடைந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் சங்கர சுப்பு. அப்போது அவர் பேசியதாவது:

பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தனியார் மருத்துவரை வைத்துக் கொள்வதற்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளன. ராம்குமாரில் இறப்பில் மர்மம் இருப்பதால்தான் நாங்கள் தனியார் மருத்துவரை கேட்கிறோம். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரேவதி என்ற பெண்ணின் மரணம் குறித்த பிரேத பரிசோதனையில் மின்சாரம் பாய்ந்து இறந்ததாக அரசு மருத்துவர் முருகேசன் அறிக்கை அளித்தார். இதனை ஏற்க மறுத்தால் இன்னொரு மருத்துவர் பிரேத பரிசோதனை செய்து இறப்பிற்கு பிறகே மின்சாரம் பாய்ந்துள்ளது என்று அறிக்கை கொடுத்தார். இதன் பிறகு அந்த வழக்கின் போக்கே மாறியது. அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. இதுபோல் பல்வேறு உதாரணங்கள் உள்ளன.
எனவே, தனியார் மருத்துவர் கண்டிப்பாக ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது இருக்க வேண்டும். தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம். ராம்குமார் மரணத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்காமல் அரசு உண்மையை வெளி கொண்டு வர ஒத்துழைக்க வேண்டும் என்று சங்கர சுப்பு கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications