சினிமா பைனான்சியரின் ரூ1 கோடி செக் சீட்டிங் புகார்... பச்சமுத்து மீண்டும் கைது?
சென்னை: எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகங்களின் தலைவர் பச்சமுத்து ரூ.1 கோடி செக் மோசடி செய்ததாக பைனான்சியர் போத்ரா சென்னை போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
வேந்தர் மூவிஸ் மதன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காசியில் போல் ஜலசமாதியாகப் போவதாக கூறி கடிதம் எழுதிவிட்டு மாயமானார். அவரை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் பூதாகரமாகியுள்ளது.

எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரியில் சீட்டுக்காக பணம் கொடுத்தவர்கள் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த பைனான்சியர் போத்ரா, எஸ்.ஆர்.எம். நிறுவனர் பச்சமுத்து மீது சராமாரியான குற்றச்சாட்டுக்களை கூறினார்.
காணாமல் போய் பல மாதங்கள் ஆகியும் மதன் கிடைக்காத நிலையில், பச்சமுத்துவை கைது செய்து விசாரித்தால் உண்மை நிலவரம் தெரிய வரும் என போத்ரா தெரிவித்தார். தங்கள் நிதி நிறுவனம் மூலம் பச்சமுத்து முன்னிலையில், மதன் "மொட்ட சிவா, கெட்ட சிவா" என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக கோடிக்கணக்கில் பணம் பெற்றதாகக் கூறினார்.
மூன்று மாதங்களில் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக உறுதி பத்திரத்தில் கையெழுத்துயிட்டனர். ஆனால், இதுவரை அந்த பணம் தனக்கு கிடைக்கவில்லை என பைனான்சியர் போத்ரா குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரத்தில் பச்சமுத்துவும் ஈடுபட்டுள்ளதால் அவரை கைது செய்யக்கோரி காவல் துறை ஆணையரிடம் தாம் மனு அளித்துள்ளதாகவும், பச்சமுத்துவை விசாரிக்கும்பட்சத்தில் உண்மை நிலவரம் வெளிவரும் எனவும் அப்போது போத்ரா கூறினார்.
இந்த நிலையில் ரூ.75 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பைனான்சியர் போத்ரா புதிய புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த புகார் மனுவில், எஸ்.ஆர்.எம் நிறுவனர் பச்சமுத்து ரூ.1 கோடி செக் மோசடி செய்து விட்டதாகவும் பணத்தை திருப்பிக் கேட்ட போது கொலை செய்து விடுவதாக பச்சமுத்து மிரட்டியதாகவும் போத்ரா குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications