சென்னை தி.நகர் குமரான் சில்க்ஸில் பெரும் தீ விபத்து... போராடும் தீயணைப்பு வீரர்கள்: வீடியோ
சென்னை தி.நகரில் குமரன் சில்க்ஸில் தீ விபத்து ஏற்பட்டு, கரும் புகை வெளிவந்து அப்பகுதியில் பரபரப்பாக உள்ளது. 100 தீயச்ணைப்பு வீரர்கள் தீயணைக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
சென்னை: சென்னையில் தி.நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் மற்றும் சென்னை சில்க்ஸ் பகுதியில் தீப்பற்றிக்கொண்டு, வெறும் புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது. அந்த்க் கடைகளில் இருந்து குபுகுபுவென புகை வருவது அங்குள்ள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராய நகரில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமிருக்கும். தமிழகத்தின் முதன்மையான வியாபாரத்தலமாக தியாகராய நகர் உள்ளது.
இங்கு வரிசையாக துணிக்கடைகளையும் நகைக்கடைகளை நெருக்கி கட்டியுள்ளனர். ஒரு கடைக்கும் இன்னொரு கடைக்கும் போதிய இடைவெளியோ, காற்றும் சூரிய வெளிச்சமும் செல்வதற்கான வாய்ப்பும் இல்லாத பகுதியாகவே இருக்கும்.
இந்நிலையில், இங்கு இன்று அதிகாலை குமரன் சில்க்ஸ் கடையில் தீவிபத்து ஏற்பட்டு அங்கிருந்து புகை வெளிவந்துள்ளது. உடனே அந்தத் தீ அருகிலிருக்கும் சென்னை சில்க்ஸ் கடைக்கும் பற்றிக்கொண்டது. உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் 15 தீயணைப்பு வண்டிகளும் 100 தீயணைப்பு வீரர்களும் வந்து தீயை அணைக்க போராடிக்கொண்டுள்ளனர்.
மேலும் தீயில் சிக்கிக் கொண்டிருந்த சென்னை சில்க்ஸ் கடையில் இருந்த 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் சென்னை மவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன், காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். அங்கு மக்கள் யாரும் கூட்டமாக நிறக வேண்டாம், வாகனக்களை நிறுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் தீவிபத்துக்காகன காரணம் இதுவரை கண்டுபிடிக்கபப்டவில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தி.நகரில் அனுமதி பெறாமல் பல கட்டிடங்கள் அதிக மாடிகளைக் கட்டியுள்ளார்கள் என புகார் எழுந்தது. அதையடுத்து அந்த கட்டிடங்கள் மூடப்பட்டிருந்தன. ஆனால் திரும்பவும் அவை எந்த மாற்றமும் செய்யாமல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.