சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து.... 4 ஊழியர்கள் காயம்
சரவணா ஸ்டோர்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 ஊழியர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். மின்கசிவால் கேண்டினில் பிடித்த தீயை ஊழியர்களே அணைத்தனர்.
சரவணன் என்பது முருகனின் பெயர்களில் ஒன்று. அவருக்கு உரிய கிரகம் செவ்வாய். செவ்வாய்கிழமை சரவணா ஸ்டோரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பாத்திரக் கடையில் அதிகாலை பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இரவு வரை நீடித்த இந்த பயங்கர விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
பெரும்பாலான ஊழியர்கள் மீட்கப்பட்ட விட்ட நிலையில் கோட்டைச்சாமி (27), ராமஜெயம் (22) ஆகிய இரு ஊழியர்கள் கருகி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications