ஆய்வுகள் இல்லாமல் உரிமம் வழங்கப்படுவது தான் பட்டாசு ஆலை விபத்துகளுக்குக் காரணம்: விஜயகாந்த்
விருதுநகர்: எந்தவித ஆய்வும் செய்யாமல் உரிமம் வழங்குவதால் தான் பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுகின்றன என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
சாத்தூர் அருகே இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேற்று தீடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இவ்வாறு தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம், ஆய்வுகள் செய்யப்படாமல் உரிமம் வழங்கப் படுவது தான் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் பல ஊர்களில் பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதி வாழ் மக்களில் பெரும்பாலானோரின் வாழ்வாதாரமே பட்டாசு ஆலைகளில் வேலை செய்வதுதான். சாத்தூர் அருகிலுள்ள சிவலிங்கபட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட விபத்தால், பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட அறைகள் வெடித்துச் சிதறி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பொழுது வேலை பார்த்த 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் யாருக்கும் தெய்வாதீனமாக எந்தவித பாதிப்பும் இந்த விபத்தால் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விதிமுறைகளின்படி பட்டாசு ஆலை நடைபெறுகிறதா? என எந்தவித ஆய்வும் செய்யாமல் உரிமம் வழங்குவதால் தான், பட்டாசு ஆலைகளில் இதுபோன்ற விபத்துக்கள் தொடர்கதையாக நடக்கிறது. எந்த துறையை எடுத்தாலும் லஞ்சமும், ஊழலும் கொடிகட்டி பறக்கிறது.
விபத்து நடக்கும்பொழுது மட்டும் பட்டாசு தொழிற்சாலைகளை பரபரப்பாக ஆய்வு செய்வதும், கடுமையான விதிமுறைகளை கடைபிடிப்பதைப் போன்ற போலி தோற்றத்தை மக்களிடத்தில் காட்டி ஏமாற்றுவதுமே இந்த அரசின் வாடிக்கை என மக்கள் பேசுகிறார்கள்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
Vijay: வதந்திகளுக்கு பதிலடி! ஷாலினியுடன் சங்கீதா.. அஜித் வீட்டில் விஜய்! லீக்கான வீடியோ -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
விஜய்கிட்ட ஒன்னுமேயில்லை..இன்னும் 10 வருஷம் போகட்டும்! அடம் பிடித்த ராகுலை கார்கே சமாளித்தது எப்படி? -
Vijay Trisha: ஜோடியாக வந்த விஜய் திரிஷா.. சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி.. ஒரே காரில் வந்து பங்கேற்பு -
சங்கீதா விஷயத்தை விட பெரிய சிக்கல்.. அவ்வளவு தூரம் வாக்குறுதி கொடுத்தீர்களே.. புலம்பி கொட்டிய விஜய் -
உலகின் முன்னணி சரக்கு கப்பல் நிறுவனம் வெளியிட்ட அலர்ட்! மொத்த உலகமும் ஸ்தம்பிக்கப்போகுது! -
ராஜ்யசபா எம்.பியாகும் அன்புமணி.. மிக இளம் வயது கேபினட் அமைச்சர் - அட்டெண்டென்ஸ் சர்ச்சை.. யார் இவர்?












Click it and Unblock the Notifications