துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் கலைந்து செல்ல மாட்டோம்... தீர்க்கமாக போராடிய குமரி மீனவர்கள்!
துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் ஓகி புயலில் சிக்கிய மீனவர்கள் மீட்கப்படும் வரை வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று குழித்துறையில் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்து போராடினர்.
Recommended Video

குழித்துறை : துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் ஓகி புயலில் சிக்கிய மீனவர்கள் மீட்கப்படும் வரை வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று குழித்துறையில் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்து போராடினர்.
ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 8 மாவட்ட மீனவ கிராமத்தினர் 12 மணிநேரத்துக்கும் மேலாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 8 நாட்களாகியும் சுமார் ஆயிரம் மீனவர்களின் நிலை என்ன என்பது தெரியாத ஆதங்கத்தில் ஏறத்தாழ 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குழித்துறையில் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் மாலை 7 மணியளவில் தான் மறியல் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். அப்போது உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் வரை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சஜ்ஜன்சிங் தெரிவித்தார்.
{photo-feature}












Click it and Unblock the Notifications