ஓகியில் சிக்கிய மீனவர்களை மீட்க கோரி கிளர்ச்சி- குளச்சல் போராட்டம் வாபஸ்
ஓகியி ல்சிக்கிய மீனவர்களை மீட்கக் கோரி குளச்சலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கன்னியாகுமரி: ஓகியில் சிக்கிய மீனவர்களை மீட்கக் கோரி குளச்சலில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் நடத்தி வந்த மாபெரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஒருவாரம் பொறுத்திருந்த கன்னியாகுமரி மீனவர்கள் நேற்று விஸ்வரூபமெடுத்தனர்.

குழித்துறையில் 12 மணிநேரத்துக்கும் மேலாக நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 8 கிராமங்களைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான பொதுமக்கள் பங்கேற்றனர். இந்நிலையில் குளச்சலில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் இன்று மீண்டும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு மீனவர்களை உடனே மீட்க வேண்டும்; முதல்வர் எடப்பாடியார் உடனே கன்னியாகுமரிக்கு வர வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து அந்த மக்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையின் முடிவில் போராட்டம் கைவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications