கடலிலேயே மீன் இல்லையாம்.. ஏமாற்றத்துடன் கரை திரும்பிய ராமேஸ்வர மீனவர்கள்
கடலில் போதிய மீன்கள் இல்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
ராமேஸ்வரம்: மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் போதிய மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்து கரை திரும்பினர்.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம்தேதி முதல் ஜூன் 14ம்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மீனவர்களும், பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் சுமார் ஒரு லட்சம் மீனவர்கள் இந்த தடைக்காலமான 60 நாட்களுக்கு கடலில் இறங்கி மீன்பிடிக்க செல்லவில்லை

மும்முரமான ஏற்பாடுகள்
இந்நிலையில் கடந்த 14-ம் தேதி மீன்பிடி தடை காலம் முடிவடைந்தது. அதனால் அன்று நள்ளிரவே மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல போகிறோம் என உற்சாகமானார்கள். ஆழ்கடலில் மீன்பிடிக்க தேவையான மீன்பிடி வலைகள், மீன்பிடி சாதனங்கள், கடலில் தங்கி மீன்பிடிக்க தேவையான டீசல், மீன்களை பதப்படுத்துவதற்கு தேவையான ஐஸ் கட்டிகள் என அனைத்தையும் தங்களது படகுகளில் நிரப்பி வைத்துக் கொண்டனர்.

மீன்கள் குவியும் என எதிர்பார்ப்பு
அதேபோல மீன்பிரியர்களும் மீன்விலை உயர்த்தப்பட்டிருந்ததால், இனி தடை காலம் முடிந்து மீன்விலை குறையும் என்றும், மார்க்கெட்டுகளில் மீன்கள் குவிய போகிறது என்றும் நினைத்திருந்தனர்.

கூடுதல் மீன்கள் இல்லை
திட்டமிட்டபடியே அன்று இரவு ஆழ்கடலுக்கு ராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டனர். ஆனால் கடலில் மீன்போக்குவரத்து குறைந்து காணப்பட்டமாக தெரிகிறது. இதனால் பல எதிர்பார்ப்புகளுடன் சென்ற மீனவர்கள் கூடுதல் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

கவலையில் மீன்பிரியர்கள்
அத்துடன் கொண்டு வந்த சொற்ப மீன்களையும் வாங்க மீன்வியாபாரிகளும் முன்வரவில்லை. இதனால் விலைவீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். மீனவர்களுடன் மீன்பிரியர்களும் சேர்ந்தே கவலையில் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications