சென்னை உட்பட 3 மாவட்ட மீனவர்களுக்கு சலுகை.. மீன்பிடி தடைக்காலம் 29ம் தேதியோடு முடிகிறது
வரும் 29ம் தேதியோடு மீன்பிடித்தடைக்காலம் சென்னை உட்பட 3 மாவட்டங்களில் முடிவடைகிறது.
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அமலில் இருந்துவந்த மீன்பிடி தடைகாலம் வரும் 29ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.
மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில், ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்கள் மீன்பிடி தடைகாலம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்தக் காலங்களில் மீன்கள் விலையேற்றம் தாறுமாறாக இருக்கும்.
இதன்படி, நாட்டின் கிழக்குக் கடலோர மாநிலங்களில் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரையும், மேற்குக் கடலோர மாநிலங்களில் ஜூன் 1 முதல், ஜூலை 31ம் தேதி வரையும் என மொத்தம் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைகாலம் பின்பற்றப்படுகிறது.

நாட்கள் அதிகரிப்பு
இந்நிலையில், தமிழகத்தில் இந்த சுழற்சி முறை, 45 நாட்களுக்கு மட்டுமே தடை என்ற அளவில் பின்பற்றப்படுகிறது. நடப்பாண்டில் இருந்து, இதனை 61 நாட்களாக அதிகரித்து, தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

விதி விலக்கு
தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் மீன்பிடிக்க அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வார்தா புயல், எண்ணூர் துறைமுகத்தில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் கசிவு விபத்து போன்ற காரணங்களால் மீன்பிடித் தொழில் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை.

மூன்று மாவட்டங்கள்
இதனால், வரும் 29ம் தேதியுடன் இந்த 3 மாவட்ட மீனவர்களுக்கான தடையை முடித்துக் கொள்ளலாம் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, பொருளாதார பாதிப்பில் உள்ளதால், இவர்களுக்கு மட்டும் சலுகை வழங்குவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 14தான்
அதேசமயம், மாநிலத்தில் மற்ற கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடை, ஜூன் 14ம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications