பெண்கள் பாதுகாப்புக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் இவைதான்.. தமிழிசை சொல்வதை பாருங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: குற்றச் சம்பவங்களை எளிதில் கண்டறியும் வகையிலும், தடுக்கும் வகையிலும் சிசிடிவி கேமராக்கள் அதிக இடங்களில் பொருத்தப்பட வேண்டும் என பாஜக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்காக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ, அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செயல்படுத்த வேண்டும்.
மேலும் காவலர்களின் ரோந்து பணிகள் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். பிரச்சனைகள் ஏற்படுத்துவதை கண்டறியும் வகையில் சிசிடிவி கேமராக்கள் அதிக இடங்களில் பொருத்தப்பட வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications