For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் – புதுக்கோட்டைக்கு புதிய கலெக்டர்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மீண்டும் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களில் ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கணேஷ் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சிறு தொழில்கள் கழக மேலாண்மை இயக்குனராக பணியாற்றும் வி.அமுதவல்லி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குனரான மைதிலி ராஜேந்திரனுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிர் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் மைதிலி ராஜேந்திரன் தமிழ்நாடு பாடநூல் கல்வி சேவைகள் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

மத்திய அரசாங்க மருந்துகள் துறை இணை செயலாளராக முன்பு பணியாற்றிய ஷம்பு கல்லோலிக்கர் மாநில அரசு பணிக்கு மாற்றப்பட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக அப்பதவியில் இருந்த வி.கே.ஜெயக்கொடிக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வி.கே.ஜெயக்கொடி மின் விசை நிதி மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டு கழக முதன்மை செயலாளர் மற்றும் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி ஆணையர் எஸ்.கணேஷ், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக சி.மனோகரனுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

English summary
Tamil Nadu government again replaced 5 IAS officers into different departments. Pudukkottai district collector Manoharan was replaced by the IAS officer S.Ganesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X