தேமுதிக (ஜெ.) அணியில் மேலும் 5 எம்.எல்.ஏக்கள்? பறிபோகிறது கேப்டனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி?
சென்னை: தமிழக அரசியல் சிறிது காலம் ஓய்ந்திருந்த கட்சி தாவல் படலம் மீண்டும் அரங்கேற இருக்கிறது. தேமுதிகவைச் சேர்ந்த மேலும் 5 எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிருப்தி அணியில் ஐக்கியமாக இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதிமுக ஆட்சி அமைக்க, தேமுதிக 28 இடங்களைக் கைப்பற்றியது. திமுக 23 இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்தது. இதனால் தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கிடைத்தது.
ஆனால் அதிமுக- தேமுதிக இடையேயான உறவு நீண்டகாலம் நீடிக்கவில்லை. இரு கட்சிகளிடையேயான உறவு முறிந்து போன பின்னர் தேமுதிகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தொகுதி நலன்களுக்கான மனு கொடுக்கத் தொடங்கினர்.

8 அதிருப்தி எம்.எல்.ஏக்கள்
இந்த பட்டியல் நீண்டு போய் கடைசியாக தேமுதிக அதிருப்தி அணியாக விஸ்வரூபமெடுத்தது. மொத்தம் 8 தேமுதிக எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அணியில் இருக்கின்றனர். மற்றொரு எம்.எல்.ஏ. பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவிலேயே இணைந்துவிட்டார்.

19 எம்.எல்.ஏக்கள்தான்
மதுரை சுந்தர்ராஜன், அருண்பாண்டியன், திட்டக்குடி தமிழ் அழகன், அருண்சுப்பிரமணியம், மாஃபா பாண்டியராஜன், மைக்கேல் ராயப்பன், சுரேஷ்குமார், சாந்தி ஆகிய அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் தனியாகத்தான் செயல்படுகின்றனர். தற்போதைய நிலையில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் பலம் 19தான்.

லோக்சபா தேர்தலில் அதிமுக வெற்றி
இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் தேமுதிக படுதோல்வி அடைய, தனித்துப் போட்டியிட்ட அதிமுக அபார வெற்றி பெற்று 37 இடங்களை வசமாக்கியது.

தனித்தே ஜெயித்தோம்..
சட்டசபை தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்ததாலேயே அதிமுக அமோக வெற்றி பெற்றது என்ற விஜயகாந்தின் வாதத்தை தவிடுபொடியாக்கி தனித்து வென்று காட்டியிருக்கிறார் ஜெயலலிதா. இதை விஜயகாந்துக்கு உணர்த்தும் வகையில் மேலும் 5 எம்.எல்.ஏக்களை அதிருப்தி அணிக்கு இழுக்க வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் 5 எம்.எல்.ஏக்கள் தாவல்
அப்படி மேலும் 5 எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அணிக்குப் போகும் நிலையில் விஜயகாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் பறித்துவிடுவது என்று முடிவில் இருக்கிறாராம் முதல்வர் ஜெயலலிதா.

10-ந் தேதிக்கு முன்பாக..
வரும் 10-ந் தேதி தமிழக சட்டசபை கூட இருக்கும் நிலையில் இனிவரும் நாட்களில் அடுத்தடுத்து கட்சி தாவல்கள் அரங்கேறக் கூடும் என்று கூறப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications