திருவள்ளூரில் ஒரே நாளில் ஐந்து கொள்ளைச் சம்பவங்கள்: போலீஸார் தீவிர விசாரணை
திருவள்ளூரில் ஒரே நாளில் ஐந்து கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால், போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த புட்லூரில் புதிய இரு சக்கர வாகனம் மற்றும் இரண்டு வீடுகளில் கார் கண்ணாடிகளை உடைத்து ஆவணங்களையும், இரண்டு வீடுகளில் இரு சக்கர வாகனத்தின் சக்கரங்களையும் திருடிய கும்பலை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த புட்லூரில் வளர்ந்து வரும் பகுதியாக இருப்பது ராமகிருஷ்ணா நகர் மற்றும் ஏவிஎம் நகர். இப்பகுதியில் வசித்து வரும் சரவணன் என்பவர் நேற்று வழக்கம் போல் காரை வீட்டு வாசலில் நிறுத்தியுள்ளார்.

இன்று காலை எழுந்து பார்த்த போது கார் கண்ணாடியை உடைத்து அதில் வைத்திருந்த கார் சம்மந்தமான ஆவணங்களை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. அதே வீட்டில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தின் முன் பக்க சக்கரத்தை திருடிச் சென்றுள்ளனர்.
அதே போல் சங்கர் என்பவர் வீட்டில் பின் சக்கரத்தை கழட்டிச் சென்றுள்ளனர். அதே போல் நகரின் அடுத்த தெருவில் உள்ள விஜயகுமார் என்பவர் வீட்டில் புகுந்த அந்த கும்பல் அவர் புதிதாக வாங்கிய இரு சக்கர வாகனத்தை கேட்டை திறந்து திருடிச் சென்றுள்ளனர்.
மேலும் நகரை ஒட்டிய ஏவிஎம் நகரில் உள்ள அரசு என்பவர் வீட்டின் முன் பக்கம் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடியை உடைத்து ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆவணங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அடுத்தடுத்த வீடுகள் மற்றும் தெருக்களில் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனம் மற்றும் கார் கண்ணாடிகளை உடைத்து நடைபெற்ற திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல் புட்லூர் பகுதியை ஒட்டியுள்ள தொழுவூரில் உள்ள டாஸ்மாக் கடை 24 மணி நேரமும் செயல்படுவதால் குடித்து விட்டு பெண்களிடம் அடிக்கடி வழிப்பறி சம்பவமும் நடைபெறுவதாகவும், காவல் துறையினர் இங்கு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த திருட்டு சம்மந்தமாக 5 பேரும் கொடுத்த புகாரின் பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications