மோசமான வானிலை.. சென்னையில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்படும்!
சென்னையில் மோசமான வானிலை நிலவுவதால், விமானங்கள் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: சென்னையில் மோசமான வானிலை நிலவுவதால், விமானங்கள் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழை பெய்து வருகிறது.

7ம் தேதி மிக கனமழை பெய்யும் என்று ரெட் அலெர்ட் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிக கனமழை பெய்து வருகிறது
இதனால் சென்னையை சாலையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அதேபோல் சென்னை விமான நிலையத்திலும் தண்ணீர் தேங்கி இருக்கிறது.
[விடாமல் கொட்டி தீர்த்த மழை.. 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!]
இதனால் சென்னையில் இன்று விமானங்கள் தாமதமாக வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்து வருவதை அடுத்து விமான புறப்பாடும் தாமதம் ஆக வாய்ப்புள்ளது.
பல்வேறு நாடுகளில் இருந்து வரும் விமானங்களும் தாமதமாக வரும். பல்வேறு ஊர்களுக்கு செல்லும் விமான புறப்பாடும் 2 மணி நேரம் தாமதம் ஆகும்.
சரியான வானிலை இல்லாத காரணத்தால் இந்த தாமதம் ஏற்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications