விடாமல் கொட்டி தீர்த்த மழை.. 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
தமிழகத்தில் நேற்று இரவு முழுக்க பெய்த மழை காரணமாக 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் நேற்று இரவு முழுக்க பெய்த மழை காரணமாக 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த ஒருவாரத்திற்கு கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழை பெய்து வருகிறது. 7ம் தேதி மிக கனமழை பெய்யும் என்று ரெட் அலெர்ட் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் நேற்று இரவு முழுக்க கனமழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இன்று மழை காரணமாக பல மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, தூத்துக்குடி, நெல்லை, காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதால், பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.
[ இரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு ]












Click it and Unblock the Notifications