இரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் பல இடங்களில் நேற்று இரவு முழுக்க கனமழை பெய்தது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் நேற்று இரவு முழுக்க கனமழை பெய்தது.
தமிழகம் மற்றும் கேரளா தற்போது அடுத்த மழைக்கு தயாராகி உள்ளது. இரண்டு மாநிலங்களிலும் அடுத்த ஒரு வாரத்திற்கு மிக அதிக கனமழை பெய்யும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
இன்றும் கனமழை பெய்ய இருக்கிறது. வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று மழை பெய்ய உள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

இரவு முழுக்க மழை
நேற்று இரவு முழுக்க தமிழகத்தில் மழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை, தஞ்சாவூர், திருச்சி, குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு முழுக்க மழை பெய்தது. இப்போது காலையிலும் பெய்து வருகிறது.

என்ன காரணமாக
வங்ககடல் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருகிறது. வெப்பசலனமும் இந்த மழைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த மழை ஒரு வாரம் வரை நீடிக்கும்.

புயல் சின்னம்
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. அப்படி மாறும் பட்சத்தில் அது புயலை உருவாக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அன்று 25 செமீ மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்றும் மழை
இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் கனமழை பெய்யும். இன்று மிக அதிக அளவில் மழை பல்வேறு மாவட்டங்களில் பெய்ய உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகிகள் கவனமாக இருக்க வேண்டும், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications