சில மணிநேர மழைக்கே ஆடிப்போன சென்னை.. சாலையில் தேங்கிய நீரால் மக்கள் பெரும் அவதி!
சென்னையில் நள்ளிரவு முதல் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
Recommended Video

சென்னை: நள்ளிரவு முதல் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை உள்பட வட மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. சென்னையில் நள்ளிரவு தொடங்கிய மழை பரவலாக பெய்தது.
பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஆவடி, அம்பத்தூர், உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. பம்மல், அனகாபுத்துர், தாம்பரம், தி நகர், சைதாப்பேட்டை, நந்தனம், ஈக்காட்டு தாங்கல், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, மந்தவெளி பகுதிகளிலும் மழை வெளுத்தது.

மக்கள் மகிழ்ச்சி
அடையாறு, தரமணி, வேளச்சேரி, கிண்டி, வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குளம்போல் தேங்கிய தண்ணீர்
மழையால் சாலையோரங்களில் தண்ணீர் தேங்கியது. மயிலாப்பூர், ஐஸ்ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது.

மக்கள் அவதி
இதனால் வாகனங்கள் நீந்தியபடியே செல்கின்றன. முழங்கால் அளவுக்கு தேங்கியிருக்கும் நீரால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

மக்கள் கோரிக்கை
சாலையோரம் உள்ள கடைகளில் வாசல் வரை தேங்கியுள்ள நீரால் கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள நீரை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எப்படி சமாளிக்கப்போகிறது?
ஒரு இரவில் சில மணி நேரம் பெய்த மழைக்கே நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளது. இந்நிலையில் வரவுள்ள பருவமழை காலத்தை அரசு எப்படி சமாளிக்கப்போகிறது என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரவலாக மழை
இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டுமின்றி விழுப்புரம், மாவட்டத்திலும் இரவு முதல் விடாமல் மழை பெய்தது. நாகை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், சுற்றுவட்டாரங்களில் நல்லமழை பெய்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications