12 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் வசிஷ்ட நதியில் கோடையில் கரைபுரண்டோடிய வெள்ளம்.. மகிழ்ச்சியில் மக்கள்!
12 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் வசிஷ்ட நதியில் கோடைக் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சேலம்: 12 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் வசிஷ்ட நதியில் கோடைக் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. கத்திரி வெயில் வரும் 28 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனால் இதுவரை வாட்டி வந்ததை காட்டிலும் இனி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.

கோடை மழை
அதேநேரத்தில் தமிழகத்தின் பல இடங்களில் வெப்பசலனம் காரணமாக பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல், தேனி, நெல்லை, விருதுநகர், மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது.

வசிஷ்ட நதியில் வெள்ளம்
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக 12 ஆண்டுகளுக்கு பிறகு வசிஷ்ட நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இடி மின்னலுடன் மழை
ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே போதிய மழை இல்லாததால் விவசாயிகளும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு ஆத்தூரில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

கல்லாற்றில் இடி
10 மணி அளவில் சாரலாக தொடங்கிய மழை சுமார் 2மணி நேரம் கொட்டிதீர்த்தது. இதனால் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆத்தூர் அருகே உள்ள கல்லாற்றில் திடீரென்று இடி விழுந்ததில், மழை நீர் வெள்ளம் என பாய்ந்து வசிஷ்ட நதிக்கு வந்தது.

12 ஆண்டுகளுக்கு பிறகு
இதனால் நள்ளிரவில் வசிஷ்ட நதியின் இரு கரையை தொட்டு மழைநீர் வெள்ளமாக ஓடியது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெள்ளப்பெருக்கை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications