தமிழக கேரளா எல்லையில் போக்குவரத்து நெரிசல்: ஐயப்ப பக்தர்கள் அவதி.
செங்கோட்டை: தமிழக கேரளா எல்லையான புளியரையில் விடிய,விடிய ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக ஐயப்ப பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல பூஜை விழாவிற்காக ஆண்டுத்தோரும் கார்த்திகை 1ம் தேதிமுதல் மாலை அணிந்து, விரதமிருந்து நாடெங்கிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம்.

தற்போது சபரிமலை சீசன் என்பதால் தமிழக எல்லாப் பகுதியான குமுளி,செங்கோட்டை புளியறை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் விடிய,விடிய சென்று வருகின்றன.
நேற்று இரவு சுமார் 11மணிமுதல் திடீர் என ஆரியன்காவு பகுதியில் போக்குவரத்து நெரிசல் உருவாகியது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களும் ,கேரளாவிலிருந்து தமிழகம் வரும் வாகனங்களும் இருபகுதிகளிலும் தேக்கம் அடையத் தொடங்கியது.

இதனால் இரண்டு பகுதிகளிலும் விடிய,விடிய வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆரியன்காவு பகுதியில் அமைந்துள்ள குறுகலான ரயில்வே பாலம்தான் தினம்,தினம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்.
இந்த பகுதியில் ஒரு கனரக வாகனம் மட்டுமே செல்லமுடியும்.அதே சமயம் இதில் பழுது ஏற்பட்டு நிற்கும் வாகனத்தால் நேற்று இரவு முதல் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. இதில் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் சபரிமலை செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications