தொடரும் பருவநிலை மாற்றம் எதிரொலி.. பூ விவசாயிகள் கவலை!
நெல்லை பருவநிலை மாற்றம் காரணமாக பூ விளைவிக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
நெல்லை: பருவநிலை மாற்றம் காரணமாக பூ விளைவிக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக பனி பொழிவு அதிகரித்துள்ளது. இது பூக்கள் உற்பத்தியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை அடுத்துள்ள கண்டிப்பேரி, பள்ளமடை சங்கரன்கோவில் வட்டார பகுதிகளில் சம்பங்கி பயிர் செய்யப்பட்டுள்ளது.

இந்த பூ பெரிய மாலைகளில் கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. கோவில் பூஜை மற்றும் திருமண விழாக்களுக்கு இந்த பூ முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள பனி பொழிவால் இந்த பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையில் கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, சம்பங்கி பூக்களுக்கு நல்ல கிராக்கி இருந்தால் கிலோ ரூ.150 வரை கூட போகும். தற்போது முக்கிய பூஜைகள், முகூர்த்தம் இல்லாததால் இதற்கான தேவையும் குறைந்துள்ளது. அதிகபட்சமாக கிலோ ரூ.80 என்ற அடிப்படையில் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
பனி பொழிவால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதியளவு மட்டுமே விளைச்சல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரை காலை 8 மணிக்கு தொடங்கும் வெயில் மாலை 4 மணி வரை கொளுத்துகிறது. அதே வேளையில் இரவு 10 மணிக்கு தொடங்கும் குளிர் காலை 6.30 மணி வரை நீடிக்கிறது. இந்த சீதோஷ்ண நிலையால் மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications