தனியார் ஹோட்டலில் இருந்த சத்துணவு முட்டைகள்.. ஷாக் ஆன அதிகாரிகள்! “பயங்கர முறைகேடு”: பாஜக பாய்ச்சல்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள உணவகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய முட்டைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அங்குள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சின்னசேலம் - சேலம் மெயின் ரோட்டில் இருந்த உணவகம் ஒன்றில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் தொடர்பாக ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகள், முத்திரையுடன் அங்கு இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய முட்டைகள் இங்கு எப்படி வந்தது என்று ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறியதையடுத்து, 100க்கும் மேற்பட்ட முட்டைகளைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சட்டவிரோதமாக அங்கன்வாடி சத்துணவு முட்டைகளை வைத்திருந்த அந்தக் கடைக்கு ரூ. 5000 அபராதம் விதித்தனர்.
தனியார் ஹோட்டலில் அரசு வழங்கும் சத்துணவு முட்டைகள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு வழங்கும் முட்டைகள் முறைகேடாக ஹோட்டல்களுக்கு விற்கப்படுவது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் ஒரு உணவகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய முட்டைகள் விற்பனைக்கு இருந்தது, சத்துணவு திட்டத்தில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இந்த சம்பவத்தை சிறியதாக எடுத்துக் கொண்டு கடந்து செல்லாமல், தமிழகம் முழுவதும் சோதனைகள் நடைபெற…
— Narayanan Thirupathy (@narayanantbjp) September 29, 2023
நாராயணன் திருப்பதி தனது X (ட்விட்டர்) சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கள்ளக்குறிச்சியில் ஒரு உணவகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய முட்டைகள் விற்பனைக்கு இருந்தது, சத்துணவு திட்டத்தில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தை சிறியதாக எடுத்துக் கொண்டு கடந்து செல்லாமல், தமிழகம் முழுவதும் சோதனைகள் நடைபெற வேண்டும். குறிப்பாக முட்டைகளை விற்பனை செய்யும் நிறுவனத்தை தீவிரமாக விசாரிக்க வேண்டும். குழந்தைகளின் சாப்பாட்டில் ஊழல் புரியும் கிராதகர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications