கையேந்த மனமின்றி பசியோடு போராட்டம்... சாலையிலேயே உயிர்விட்ட கால்பந்தாட்ட வீரர்...
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே பசி கொடுமையால் கால்பந்து விளையாட்டு வீரர் நான்கு வழிச்சாலையில் மயங்கி
விழுந்து இறந்தார்.
திண்டுக்கல் தாலுகா அலுவலகம் சாலையில் லைன் தெருவைச் சேர்ந்தவர் 45 வயதான பாஸ்கரன். திண்டுக்கல் மாவட்டத்தில் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என பலராலும் அறியப்பட்டவர்.

இவர் தனது விளையாட்டு மீதான ஆர்வத்தினால் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்தவர். பல்வேறு போட்டிகளில் பங்குற்று வெற்றி பெற்று பரிசுகளை குவித்தவர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டதால், தனது தாயார் மாரியம்மாள், சகோதரி ஈஸ்வரி ஆகியோரின் பாதுகாப்பில் இருந்தார்.
கடந்த 30-ம் தேதியன்று ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள விளையாட்டு மைதானத்திற்கு செல்வதாக வீட்டைவிட்டு புறப்பட்டவர் தவறுதலாக வேடசந்தூரை அடுத்துள்ள அய்யர்மடத்தில் (திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலை) இறங்கி விட்டார்.
ஆனால் மீண்டும் திரும்பிச் செல்ல பணம் இல்லாத நிலையில் யாரிடமும் கையேந்த அவருக்கு மனமில்லை. இந்த நிலையில் இரு நாள் பசியோடு போராடிய பாஸ்கரன் சாலை ஓரத்திலேயே மயங்கி விழுந்து இறந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications