பசுமை நிறைந்த நீர் நிலைகள்.. பாடித் திரியும் "ஃபாரீன்" பறவைகள்... நெல்லையில்!
நெல்லை: நெல்லை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து பிரமாதமாக இருப்பதால் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள குளங்கள் நீர்வாழ் பறவைகளுக்கு ஏற்றதாக நிரம்பி வருகிறது. அதிலும் தாமிரபரணி பாசன கால்வாயில் தண்ணீர் வரும் காலங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் மாதக்கணக்கில் வந்து முகாமிட்டு செல்லும்.

குறிப்பாக கூந்தன்குளம், வாகைகுளம் உள்ளிட்ட குளங்களில் வெளிநாட்டு பறவைகள் மாதக்கணக்கில் கூட முகாமிட்டு தங்கி செல்கின்றன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்தாண்டு நடந்த கணக்கெடுப்பில் 54 ஆயிரம் பறவைகள் இருப்பது தெரிய வந்தது.
பறவைகள் சரணாலயம் எனப்படும் கூந்தன்குளத்தில் அதிக அளவில் பறவைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது நெல்லை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த குளங்களில் வெளிநாட்டு பறவைகள் முகாமிட தொடங்கியுள்ளன.
ராஜவல்லிபுரம், பாலமடை குளங்களில் பிளமிங்கோ பறவைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
மேலும் ராஜவல்லிபுரம் குளத்தில் கூழை கிடா, செந்நாரை, நாகமக்கோழி, அன்னப்பறவை, நீர்வாத்து உள்ளிட்ட பறவைகள் நூற்றுக்கணக்கில் குவிந்துள்ளன.
குஜராத் மாநிலத்தில் இரு்ந்து வரும் பூநாரை இனப்பறவைகளும் இக்குளங்களில் அதிக அளவில் கூடு கட்டத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நெல்லை கால்வாயில் தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் உள்நாடு மற்று்ம் வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்தக் கால்வாயில் கூடுதல் தண்ணீர் வந்தால் இன்னும் பறவைகள் அதிகமாக வரும் என தெரிவித்தனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications