பசுமை நிறைந்த நீர் நிலைகள்.. பாடித் திரியும் "ஃபாரீன்" பறவைகள்... நெல்லையில்!
நெல்லை: நெல்லை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து பிரமாதமாக இருப்பதால் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள குளங்கள் நீர்வாழ் பறவைகளுக்கு ஏற்றதாக நிரம்பி வருகிறது. அதிலும் தாமிரபரணி பாசன கால்வாயில் தண்ணீர் வரும் காலங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் மாதக்கணக்கில் வந்து முகாமிட்டு செல்லும்.

குறிப்பாக கூந்தன்குளம், வாகைகுளம் உள்ளிட்ட குளங்களில் வெளிநாட்டு பறவைகள் மாதக்கணக்கில் கூட முகாமிட்டு தங்கி செல்கின்றன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்தாண்டு நடந்த கணக்கெடுப்பில் 54 ஆயிரம் பறவைகள் இருப்பது தெரிய வந்தது.
பறவைகள் சரணாலயம் எனப்படும் கூந்தன்குளத்தில் அதிக அளவில் பறவைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது நெல்லை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த குளங்களில் வெளிநாட்டு பறவைகள் முகாமிட தொடங்கியுள்ளன.
ராஜவல்லிபுரம், பாலமடை குளங்களில் பிளமிங்கோ பறவைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
மேலும் ராஜவல்லிபுரம் குளத்தில் கூழை கிடா, செந்நாரை, நாகமக்கோழி, அன்னப்பறவை, நீர்வாத்து உள்ளிட்ட பறவைகள் நூற்றுக்கணக்கில் குவிந்துள்ளன.
குஜராத் மாநிலத்தில் இரு்ந்து வரும் பூநாரை இனப்பறவைகளும் இக்குளங்களில் அதிக அளவில் கூடு கட்டத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நெல்லை கால்வாயில் தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் உள்நாடு மற்று்ம் வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்தக் கால்வாயில் கூடுதல் தண்ணீர் வந்தால் இன்னும் பறவைகள் அதிகமாக வரும் என தெரிவித்தனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications